Skip to main content

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி கடல்வழியே வந்த இலங்கைத் தமிழர்கள்!!

Apr 08, 2022 88 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி கடல்வழியே வந்த இலங்கைத் தமிழர்கள்!! 

இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு குழந்தைகளுடன் தம்பதி ஒருவர் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.



இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது.  இலங்கையில் பணவீக்கம்  உச்சத்தை எட்டியுள்ளது, இதனால் பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல கடைகள்  பொருட்கள் இல்லாமல் காலியாகவே காட்சியளிக்கிறது.  உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு பெட்ரோல் பங்குகளிலும் தவித்து வருகின்றனர். பொருட்களின் விலையும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.



இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில் தமிழர்கள் 4 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.  ஆபத்தான முறையில் இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெற்றோரிடம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே இரண்டு குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடைந்த நிலையில்,  மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததன் மூலம்,  தமிழகம் வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை