டைட்டில் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என தெரிந்தபிறகு அவர் எடுத்த இந்த முடிவு ஸ்மார்ட் ஆனது என பலரும் கேபியை பாராட்டினார்கள்.
இந்நிலையில் தற்போது கேபிக்கு அவரது நட்பு வட்டாரத்திலும் பாராட்டு குவிந்து வருகிறது. சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி கேபியை கட்டியணைத்து 'என் செல்லக்குட்டிக்கு இவ்ளோ அறிவு இருக்கா' என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது கேபிக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்ட்டி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள். இது பற்றி அவர் பதிவிட்டு இருப்பதாவது..
"பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒழுங்காக திருப்பி வந்ததே பெரிய சாதனை என நான் சொல்வேன். இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு சிறந்த அனுபவம். என நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது செம கியூட்டான விஷயம். எனக்காக அவர்கள் செய்த விஷயத்திற்காக நான் எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன். எப்போதும் பாசிட்டிவ் ஆக இருப்போம் குமாரு" என கேபி குறிப்பிட்டு உள்ளார்.