Skip to main content

யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது !

Jan 18, 2021 212 views Posted By : YarlSri TV
Image

யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது ! 

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொது சந்தைகளும் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளது.



கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில்,  வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க  மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.



யாழ்.மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை, மருதனார்மடம் பொதுச்சந்தை மற்றும் ஏனைய பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.



மேலும் சந்தைகளில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



குறித்த சந்தைகளில் பொலிஸார், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை