Skip to main content

இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு!

Jan 18, 2021 226 views Posted By : YarlSri TV
Image

இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு! 

இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.



அதன்படி 763 புதிய கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில் நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 53 ஆயிரத்து 76 ஆக உயர்வடைந்துள்ளது.



குறித்த கொரோனா நோயாளர்களில் 747 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.



ஏனைய இருவர் சிறைச்சாலை கொத்தணியுடனும் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.



அதன்படி, மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 49 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.



இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 264 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை