இந்தியாவுடனான டெஸ்ட்: அறிமுக வீரரின் அரைசதத்துடன் ஆட்டநேர முடிவில் ஆஸி 166/2!
Jan 07, 2021 268 views Posted By : YarlSri TV
இந்தியாவுடனான டெஸ்ட்: அறிமுக வீரரின் அரைசதத்துடன் ஆட்டநேர முடிவில் ஆஸி 166/2!
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
முதல் இன்னிங்ஸிற்றாக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் ஸ்டீவ் ஸ்மித் 31 ஓட்டங்களுடனும் மார்னஸ் லபுஸ்சேகன் 67 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
சிட்னி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றது.
இப்போட்டியில் அவ்அப்போது மழை குறுக்கீடு செய்ததால், இன்று மொத்தமாக 55 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது.
இதில் அணியின் சார்பாக வில் புகோவ்ஸ்கி 62 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை அவுஸ்ரேலியா அணி நாளை தொடரவுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago