ஜேர்மனியில் ஜனவரி 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு
Jan 06, 2021 225 views Posted By : YarlSri TV
ஜேர்மனியில் ஜனவரி 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
இதனையடுத்து ஜனவரி 10ஆம் திகதி வரை அமுலில் உள்ள நாடளாவிய முடக்கத்தை, ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முடக்கத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது என ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago