Skip to main content

கேரளாவில் புதிய நோய் பரவல் : ஒருவர் உயிரிழப்பு!

Dec 21, 2020 237 views Posted By : YarlSri TV
Image

கேரளாவில் புதிய நோய் பரவல் : ஒருவர் உயிரிழப்பு! 

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தொற்றால், சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குறித்த நோயின் அறிகுறிகளாக லேசான வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் ஜெயஸ்ரீ கூறும்போது, ‘இந்த பகுதியில், ஷிகெல்லா பக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே, நோயினால் பாதிகக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.



மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறும்போது, ‘சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவு மூலம் இந்த நோய் ஏற்படுவதாக தெரிகிறது.



ஓரிரு நாட்களில் சுகாதார முகாம் நடத்தப்பட்டு, நோய் தொற்றுக்கான காரணங்கள் கண்டறியப்படும். மக்கள் சுகாதாரத்தை கடைப்பிடித்தால், இந்த நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை