2020ம் ஆண்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளது - டிஜிபி தில்பாக் சிங்
Jan 01, 2021 275 views Posted By : YarlSri TV
2020ம் ஆண்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளது - டிஜிபி தில்பாக் சிங்
ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு 15 போலீசார் தங்கள் பணியின் போது கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3,500 போலீசார் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மீண்டுள்ளனர்.
2018, 2019 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
அதேநேரத்தில், 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயங்கரவாத அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், அவர்களில் 70 சதவீதம் பேரை மீட்டு, கைது செய்துள்ளோம் என்பது சாதகமான அம்சமாகும்.
பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சிகள் இருந்தபோதிலும், கடந்த 3, 4 ஆண்டுகளில் இந்த 2020ம் ஆண்டு ஊடுருவல் வழக்குகள் மிகக்குறைவாகும். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பணத்தை டிரோன்கள் மூலம் வழங்க முயன்று தோல்வியடைந்தனர்.
ஜம்முவில் 12 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக குறைந்துள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அந்த பயங்கரவாதிகளை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago