Skip to main content

காங்கேசன்துறை கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் மீட்பு!

Dec 28, 2020 223 views Posted By : YarlSri TV
Image

காங்கேசன்துறை கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் மீட்பு! 

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.



காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் மீட்டனர்.



எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.



கஞ்சா போதைப்பொருள் பொதிகளை, நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை