ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன்!
Dec 14, 2020 239 views Posted By : YarlSri TV
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன்!
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ள கமல், தொழில் வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “பல நுாற்றாண்டுகள் பழமையான சரித்திர புகழ் பெற்றது மதுரை. 1919ல் காந்தி, ரவுலட் சட்டத்தை எதிர்த்து இளைஞர்களை திரட்டியபோது இந்த மதுரை அவருக்கு கை கொடுத்தது. அவருடைய ஆடையை மாற்றியது மதுரை விவசாயி.
அரை நுாற்றாண்டுகளாக மதுரையின் கலாசாரம் அழிந்து விட்டது. மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு. அவரது கனவின் தொடர்ச்சி நான்.
அவருடைய கனவை நிகழ்த்தி காட்டாமல் உறங்கி கொண்டிருக்கும் ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது.அரசியல் இளைஞர்களை பாதித்துவிட்டது. அதற்கு பதில் கொடுக்க அரசியலில் இளைஞர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதற்காக இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். வரும் ஜனவரியில் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடக்கும். மே மாதம் – தேர்தலில் – கயவர்களுடன் மல்லுக்கட்டுவோம். அதற்கு நாம் தயாராக வேண்டும். 37 ஆண்டுகள் நற்பணி செய்தால் போதும் என நினைத்தேன். ஆனால் என்னை அவ்வாறு வாழ விடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
உக்ரைனை ரஷ்யா கைப்பற்றிவிட்டால்..... - அடுத்த புதிய அதிபர் இவர்தானாம்... - வெளியான புதினின் ரகசிய பிளான்
-
உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது!
-
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago