தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக உள்ளார்!
Dec 14, 2020 294 views Posted By : YarlSri TV
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக உள்ளார்!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று படத்தையும் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.
இந்நிலையில், சூர்யா தயாரிக்கும் 8-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி குழந்தைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாராக உள்ளது. இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்க உள்ளார். இதில் கோபிநாத் ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும், மேகா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப்படத்தின் மூலம் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் பல்வேறு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago