கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா!
Dec 17, 2020 235 views Posted By : YarlSri TV
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிலாபம்- ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர், மேலதிக சிகிச்சைக்காக வத்துபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த பெண்ணுடன் பணியாற்றிய மேலும் 10பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய ஏனையவர்களை கண்டறியும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1506 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1506 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1506 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1506 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1506 Days ago