சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை – கே.என்.நேரு குற்றச்சாட்டு
Sep 19, 2020 229 views Posted By : YarlSri TV
சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை – கே.என்.நேரு குற்றச்சாட்டு
திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை என தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு குற்றம் சாட்டினார்.
திருச்சியில், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும், தமிழகத்துக்கு வந்து அரசு வேலைகளில் சேரலாம் என அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோய்விட்டதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் வடமாநில இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள் என்றும், அதனால், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை தி.மு.க வைத்துள்ளது என்றும், வரும் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் இதை அறிவிப்பார் என்றும் நேரு கூறினார். தற்போது சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி பெற முடியாத நிலை உள்ளதாகவும் நேரு தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago