Skip to main content

சுகாதார அதிகாரிகளின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பு…!

Dec 15, 2020 215 views Posted By : YarlSri TV
Image

சுகாதார அதிகாரிகளின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பு…! 

நாட்டிற்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் செயற்பாட்டினை தொடங்கவுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் இறுதி ஒப்புதலுக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை காத்திருக்கின்றது.



அதன்படி குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடி வருவதாகவும் அவர்களின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.



இது சுகாதாரம் சார்ந்த பிரச்சினை என்பதனால் அதிகாரிகளினால் பயணத்தை தடை விதிக்கப்பட்டது என்றும் எனவே, இந்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அவர்களால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



அத்தோடு கொரோனா போன்ற ஒரு தொற்று ஏற்பட்டால், அந்தத் துறை மீண்டும் புத்துயிர்பெற தேவையான வழிகாட்டுதல்களையும் சுகாதார அதிகாரிகள் வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



டிசம்பர் 26 முதல் இலங்கைக்கு வணிக சேவை உட்பட அனைத்து விமான சேவைகளையும் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



அத்தோடு ஜனவரி முதல் நாட்டினை படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை