Skip to main content

வழக்கு தொடுத்த ஐஸ்வர்யா ராயின் மகள் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Apr 20, 2023 152 views Posted By : YarlSri TV
Image

வழக்கு தொடுத்த ஐஸ்வர்யா ராயின் மகள் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு 

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சனின் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்களை மீது நடவடிக்கை எடுக்குமாறு இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் தன் தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



தன்னுடைய உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.



இந்நிலையில் ஆராத்யாவின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.



இதன்போது ஆராத்யா குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த காணொளிகளை உடனடியாக நீக்குமாறு கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



மகளின் இந்த சட்ட போராட்டத்துக்காக அலைந்ததன் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.



இதேவேளை, வழக்கு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால் இன்னும் சில தினங்களில் மும்பையில் நடக்கும் பொன்னியின் செல்வன் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகின்றது


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை