கிளிநொச்சியில் இருபது வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று!
Dec 07, 2020 211 views Posted By : YarlSri TV
கிளிநொச்சியில் இருபது வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று!
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய முதியவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையவருக்கே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் பணியாற்றிய எரிபொருள் கடைக்கு அருகிலுள்ள குடிநீர் விநியோக நிலையம் மற்றும் மலர்ச்சாலை ஆகியவற்றிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குடிநீர் விநியோக நிலையத்திலிருந்த மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இவர்களோடு தொடர்பிலிருந்த பலருக்கு முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படாத நிலையில், முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு 11 ஆவது நாள் பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோதே மலர்ச்சாலை இளைஞனுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 10 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்துக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒருவருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago