Skip to main content

உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு!

Dec 05, 2020 303 views Posted By : YarlSri TV
Image

உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு! 

உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக, தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் வலியுறுத்தியுள்ளார்.



கொரோனா தொற்றை உலக நெருக்கடியாக குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தொற்றுக்கு கிடைக்கும் தீர்வானது, உலக பொது பொருளாக கொண்டு சமமுடன் பகிரப்பட வேண்டும். அதற்கு பதிலாக தனிப்பட்ட நபருக்கான பொருட்களாக பயன்படுத்தப்பட கூடாது என கூறினார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் சமீப வாரங்களில் வரவேற்கத்தக்க முடிவுகள் காணப்படுகின்றன. இவை சுரங்க முடிவில் காணப்படும் வெளிச்சம் போல் பிரகாசமுடன் உள்ளது. தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை நாம் தொடங்க வேண்டும்.



கொரோனா தடுப்பு மருந்து தேவைகளுக்கான நெருக்கடியில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள், ஏழை மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை மிதிக்க கூடிய உலகை நாம் ஏற்க கூடாது’ என்று கூறியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை