Skip to main content

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டிய தேவை இல்லை – தடுப்பூசி குறித்து மத்திய அரசு விளக்கம்!

Dec 02, 2020 241 views Posted By : YarlSri TV
Image

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டிய தேவை இல்லை – தடுப்பூசி குறித்து மத்திய அரசு விளக்கம்! 

கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைத்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதனை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் உறுதிப்படுத்தியுள்ளார்.



தொடர்ந்து தெரிவித்த அவர்,  கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம் வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான்.



வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால்  ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்



ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை