Skip to main content

மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Dec 01, 2020 242 views Posted By : YarlSri TV
Image

மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது! 

நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.



150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சியில் 74.67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,122 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 9,101 வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. டிஆர்எஸ் 150 ,பாஜக 149, காங்கிரஸ் 146 ,தெலுங்குதேசம் 106 , ஓவைசியில் AIMIM 51 இடங்களில் போட்டியிடுகின்றன.



ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற சந்திரசேகரராவின் ஆளும் டிஆர்எஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை