கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது – அமைச்சர்!
Nov 28, 2020 250 views Posted By : YarlSri TV
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது – அமைச்சர்!
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடத்தப்படுமா என்பது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றில் இன்று (சனிக்கிழமை) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளில் 5 ஆயிரத்து 100 பாடசாலைகள் மட்டுமே நவம்பர் 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டனஎன்றும் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொரோனா வைரஸ் மற்றும் அது தொடர்பான அச்சத்தை கருத்தில் கொண்டு நாட்டின் சில பகுதிகளில் பாடசாலைகளை அதிகாரிகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,
குறிப்பாக இந்த நிலைமை தொடர்ந்தால் இந்த நிலையை கருத்தில் கொண்டு தீர்க்கமான முடிவு அடுத்த வாரம் எட்டப்படும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago