காவனின் 35 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறத!
Nov 28, 2020 233 views Posted By : YarlSri TV
காவனின் 35 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறத!
காவனின் 35 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறது.
இலங்கை காடுகளில் 7500க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தும், காட்டழிப்பினால் உணவு ஊருக்குள் வந்து குப்பை மேடுகளில் பேப்பர் திண்ணும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன அந்த யானைகள். அந்த நாடு, யானைகளே இல்லாத நாடான பாகிஸ்தானுக்கு வழங்கிய யானையும் தனிமையில் மன நலம் பாதித்து, நீதிமன்றத்தின் உத்தரவினால் கம்போடியாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
பாகிஸ்தானில் யானைகளே இல்லை என்பதால் அந்த நாட்டுக்கு 1985ம் ஆண்டு ஒரு வயதுடைய காவன் எனும் யானையை பரிசாக வழங்கியது இலங்கை. அந்த யானைக்கு துணையாக சஹோலி எனும் பெண் யானையையும் 1990ல் வழங்கியது இலங்கை
பாகிஸ்தானின் வெப்பநிலை தாங்க முடியாமல் கடந்த 2012ல் சஹோலி உயிரிழந்தது. சஹோலியின் பிரிவினாலும் அதிக வெப்பநிலையினாலும் வாடி வந்த காவன், மனநிலை மிகவும் பாதிப்படைந்தது. இதனால் சாதுவாக இருந்த காவன் 2015ம் ஆண்டில் மூர்க்கத்தனமாக மாறியது. அதனால் காவனை சங்கிலியால் கட்டி வைத்தனர்.
தனிமையின் விரக்தியினால் காவன் அடிக்கடி சுவற்றை முட்டிக்கொண்டு நிற்பது வழக்கம். அதை விலங்குகள் ஆர்வலர் ஒருவர் போட்டோ எடுத்து வெளியிட, உலகம் முழுவதும் அந்த போட்டோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவனை விடுவிக்க உலகம் முழுவதும் இருந்து குரல்கள் வலுத்தது. காவனை விடுவிக்க கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகளின் உத்தரப்படி காவனை கம்போடியா சரணலாயத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக விமானம் மூலம் நாளை பாகிஸ்தானில் இருந்து கம்போடியா செல்கிறது.
35 வருட போராட்டத்திற்கு பின்னர் புதுவாழ்கை தொடங்கப்போகும் காவனுக்கு ஆடல், பாடலுடன் பிரிவு உபச்சார நிகழ்வு நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் பாகிஸ்தானில் உள்ள விலங்குகள் ஆர்வலர்கள்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago