Skip to main content

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் ஆற்றங்கரையில் குழந்தை மாயம்!

Nov 27, 2020 228 views Posted By : YarlSri TV
Image

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் ஆற்றங்கரையில் குழந்தை மாயம்! 

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் வசித்து வரும் தம்பதி சுந்தர்- பிரியா. இவர்களுக்கு யோகித் (4), நிக்லேஷ் (2) என்ற மகன்கள் இருந்தனர். இந்த தம்பதி தனது பிள்ளைகளுடன் தாத்தா சின்னச்சாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். தோட்டத்தில் வேலை பார்த்து வரும் சின்னச்சாமி, தனது பேரன்களை அழைத்துக் கொண்டு பெரியாற்றங்கரையில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.



அவருடன் அவரது மனைவியும் உடன் சென்றிருக்கிறார். தோட்டத்தில் சின்னசாமியும் அவரது மனைவியும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சிறுவர்கள் இரண்டு பேரும் பெரியாற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் நிக்லேஷ் நீரில் விழுந்ததை பார்த்த யோகித், சத்தம் போட்டு தனது தாத்தாவை அழைத்துள்ளார். உடனே அங்கு சென்ற சின்னசாமி, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் சிறுவனை எங்கும் காணவில்லையாம்.



சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா? என கேள்வி எழுந்துள்ளது. சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை