Skip to main content

கோர விபத்தில் ஒருவர் பலி நான்கு பேர் கவலைக்கிடம்!

May 09, 2021 175 views Posted By : YarlSri TV
Image

கோர விபத்தில் ஒருவர் பலி நான்கு பேர் கவலைக்கிடம்! 

அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.



விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அதிக வேகத்தில் பயணித்துள்ள கொள்கலன் வாகனம் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் மற்றும் மிதிவண்டி ஒன்றிலும் மோதியுள்ளதாக ´தெரிவிக்கப்படுகின்றது



பின்னர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றில் மோதி, அருகில் இருந்த பாதுகாப்பு சுவர் மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.



விபத்தில் காயமடைந்த நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



விபத்து தொடர்பில் நொச்சியாகம காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை