காற்று மாசு தொல்லையால் டாக்டர்கள் அறிவுரைப்படி சில நாட்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார்!
Nov 21, 2020 215 views Posted By : YarlSri TV
காற்று மாசு தொல்லையால் டாக்டர்கள் அறிவுரைப்படி சில நாட்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார்!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 12-ந் தேதி மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக மகன் ராகுல் காந்தியுடன் அவர் அமெரிக்கா சென்று திரும்பினார்.
இதனால் அவர்கள் இருவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை.
தற்போது டெல்லியில் காற்று மாசு தொல்லை அதிகரித்துள்ள நிலையில், சோனியாவுக்கு மார்பில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சில நாட்கள் டெல்லியில் இருந்து வெளியேறி வேறு ஏதாவது நகரத்துக்கு சென்று ஓய்வு எடுப்பது நல்லது என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
இதனால் அவர் கோவா அல்லது சென்னை வரக்கூடும் என நேற்று காலையில் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில், மகன் ராகுலுடன் சோனியா காந்தி நேற்று மதியம் கோவா சென்றார். அங்கு பனாஜியில் உள்ள தபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்கள், தெற்கு கோவாவில் உள்ள ஓய்வு விடுதிக்கு சென்றார்கள்.
அங்கு சோனியாவும், ராகுலும் சில நாட்கள் தங்கி இருப்பார்கள்.
காற்று மாசு குறைந்த பின்னர் அவர்கள் டெல்லிக்கு திரும்புவார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
8 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago