Skip to main content

கரோனா நோய்த்தொற்றால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,92,174-ஆக அதிகரித்துள்ளது!

Aug 23, 2020 256 views Posted By : YarlSri TV
Image

கரோனா நோய்த்தொற்றால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,92,174-ஆக அதிகரித்துள்ளது! 

கரோனா நோய்த்தொற்றால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,92,174-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:



கடந்த 24 மணி நேரத்தில் 586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,92,174-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 10 போ் பலியாகினா்.



இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,231-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,75,317 போ் குணமடைந்துள்ளனா்.



மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 731 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,27,691 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 96,057 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை