மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்!
Nov 08, 2020 265 views Posted By : YarlSri TV
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தோட்டத்தில் அபிராமி என்பவரின் கணவர் பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கோவில்பட்டி வட்டம் சுப்ரமணியம் புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் சிறுவன் சந்தியாகு விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் தென் மறையூர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் கருப்பையா என்பவர் எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் சிறுவன் சுரேன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்,
கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிராமத்தை சேர்ந்த லூயிஸ் மார்ட்டின் என்பவரின் மகன் ஜெய சேகர் என்பவர் கட்டட பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் , சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சுரேன் என்பவர் லாரியில் மூட்டைகளை ஏற்றும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் , சோழிங்கநல்லூர் பள்ளிக்கரணை கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் பாபு என்பவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம்பலம் கிராமத்தை சேர்ந்த காளை பாண்டியன் என்பவரின் மகன் சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago