தமிழக பள்ளிகள் திறப்பு உறுதி?
Nov 07, 2020 245 views Posted By : YarlSri TV
தமிழக பள்ளிகள் திறப்பு உறுதி?
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து குடும்ப நலத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
முதல்வரும் அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி நவம்பர் 9ஆம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தி கருத்துகளைப் பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்ற சூழல் உருவானது.
இந்நிலையில் குடும்ப நலத்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், “மாணவர்களைப் பரிசோதிக்க ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும். வைட்டமின் மாத்திரைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளைத் திறக்கும்போது மாணவர்களைப் பரிசோதித்தல் உள்ளிட்ட ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று குடும்ப நலத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி நவம்பர் 16ஆம் தேதி அன்று பள்ளிகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago