ஆபாசப்படங்கள் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்த காசி மீது, மேலும் ஒரு வழக்கு!
Nov 07, 2020 304 views Posted By : YarlSri TV
ஆபாசப்படங்கள் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்த காசி மீது, மேலும் ஒரு வழக்கு!
நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாசப் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இவரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், முதன் முதலாக சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் புகார் அளித்தார். சமூக வலைதளங்களில் காதல் மன்னனாக வலம் வந்த காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கன்னியாகுமரி காவல்துறை கோரிக்கை விடுததன் பேரில், காசி வழக்கு சிபிசிஐடி வசம் மாறியது. காசி மற்றும் அவரது நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். அதில் காசி தனது நண்பர் தினேஷுடன் சேர்ந்து, பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்து வந்தது அம்பலமானது. காசி மீது இதுவரை 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். ஆபாச படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு தன்னை மிரட்டியதாகவும், பணம் பறித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில், காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago