கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!
Apr 19, 2020 1536 views Posted By : YarlSri TV
கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!
உங்களின் அரசியல் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும், தயவு செய்து கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்' என, முதல்வருக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:'கொரோனா மூன்றே நாளில் ஒழிக்கப்பட்டு, ஜீரோவாகி விடும்' என, ஏதோ, 'சூ... மந்திரகாளி' போல, முதல்வர் சொல்கிறார். 'ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள், மார்ச், 9ல், வந்து விடும்; 10ம் தேதியே, ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து விடுவோம்' என்றார்.
அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்; வந்ததோ வெறும், 800 கோடி ரூபாய் தான்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தாமதம், மெத்தனம், அலட்சியம், அரசு நிர்வாகத்தின் மீதான புகார்கள், சுகாதாரத் துறை கொள்முதல்களில் அரங்கேறிய மர்மங்கள் பற்றி, நாங்கள் இன்னும் பேசவில்லை; எப்போதும் பேசத்தயார்.
பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிபரங்களை அள்ளி வீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனே வாங்குங்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தராதீர்கள். எப்படியாவது மக்களை காப்பாற்றுங்கள்.நோயை மறைப்பது என்பது, உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவது.
உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாட வேண்டாம்.'கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற, அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு, நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்தி விட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்து நிறுத்தப் பாருங்கள்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago