Skip to main content

மும்பையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, மருத்துவமனை செக்யூரிட்டி பாலியல் தொல்லை!

Nov 07, 2020 283 views Posted By : YarlSri TV
Image

மும்பையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, மருத்துவமனை செக்யூரிட்டி பாலியல் தொல்லை! 

மும்பையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, மருத்துவமனை செக்யூரிட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில், கொரோனா உறுதியான பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனி அறையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில நேற்று இரவு 2.30 மணியளவில் சூரஜ் (21) என்ற மருத்துவமனை செக்யூரிட்டி, அந்த பெண்ணின் அறைக்குள் சென்று ஆக்சிஜன் அளவை சரிபார்ப்பது போல பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.



இரவு நேரத்தில் எதிர்பாராத வகையில், தனக்கு நேர்ந்த கொடுமையால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனே அருகில் இருந்த எச்சரிக்கை மணியை அடித்துள்ளார். அதனை கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் பலர், அந்த பெண்ணின் அறைக்கு வந்துள்ளனர். உடனே, அங்கிருந்து சூரஜ் தப்பியோட முயன்றுள்ளனர். அவரை மடக்கி பிடித்த ஊழியர்கள், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சூரஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை