Skip to main content

தனிமைப்படுத்தப்பட்ட வடமராட்சி நெல்லியடி இராச கிராமத்திற்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு!

Oct 30, 2020 253 views Posted By : YarlSri TV
Image

தனிமைப்படுத்தப்பட்ட வடமராட்சி நெல்லியடி இராச கிராமத்திற்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு! 

பெலியாகொட  மீன் சந்தையுடன் தொடர்பால் ஒருவருக்கு  கொரோணா தொற்று ஏற்பட்டுள்ளதால்  இராச கிராமம்  நேற்றுமுதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.இங்கு இராணுவம் போலீசார் யாரும் உட்சென்று வராமலும் வெளியேறாமலும் இருப்பதற்க்காக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தப்ப. இராச  கிராம மக்களுக்கு பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவெள குறித்த இராச கிராமத்தில் இருந்தே வடமராட்சி தனியார் போக்குவரத்து சேவையில்  அதிகமான சாரதிகள் நடத்துநரகள் பணியாற்றிவருவதால் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண வழித்தட சேவை இடை நிறுத்தப்பட்டு வடமராட்சி தனியார் சிற்றூர்தி உரிமையாளர் சங்க அலுவலகமும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பருத்தித்துறை நகரின் பிரபல தையல் நிலையமும் இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை