Skip to main content

பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு – கணவர் போலீசில் சரண்!

Oct 25, 2020 215 views Posted By : YarlSri TV
Image

பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு – கணவர் போலீசில் சரண்! 

ஆம்பூர் அருகே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை, அலுவலகத்திற்குள் புகுந்து கணவர் சராமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுரேகா. இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன்



திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும் மஞ்சுரேகா, மாதனூர் பகுதியில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்ற தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மஞ்சுரேகாவை சரமாரியாக



வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் தலை, கை மற்றும் கால் பகுதியில் படுகாயமடைந்த மஞ்சுரேகாவை உடனிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தப்பியோடிய தினேஷ், பாகாயம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை