எதிரிகளால் கணிக்க முடியாத வகையிலான புதிய சாலை - இந்தியா
Sep 07, 2020 231 views Posted By : YarlSri TV
எதிரிகளால் கணிக்க முடியாத வகையிலான புதிய சாலை - இந்தியா
இந்தியா - சீனா இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. கல்வானில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து, சீனா உடனான எல்லைப்பகுதியில் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக எல்லையில் முக்கிய சாலை ஒன்றை அமைக்கும் பணியின் பெரும்பகுதியை எல்லை சாலைகள் அமைப்பான BRO நிறைவு செய்துள்ளது. இந்த சாலை எந்த சர்வதேச எல்லைகளுக்கும் அருகில் இல்லாதால் அண்டைநாடுகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என கூறப்படுகிறது.
இந்த சாலை, பாதுகாப்புப்படையினருக்கான போக்குவரத்துக்கு பேருதவியாய் அமையும் என கூறப்படுகிறது. ஸ்ரீநகர் - கார்கில் - லே மற்றும் மணலி - ஸர்சு - லே சாலைகள் எதிரிகளை எளிதில் கண்காணிக்கும் வகையில் சர்வதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 280 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எல்லை சாலைகள் பணிக்குழு தெரிவித்துள்ளது. மணலியில் இருந்து லே செல்வதற்கு 12 முதல் 14 மணிநேரம் ஆகும் நிலையில், புதிய சாலையால் பயணநேரம் 5 முதல் 6 மணிநேரமாக குறையும் என கூறப்படுகிறது.
இதற்கு முன் அமைக்கப்பட்ட இரு சாலைகள் வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், புதிய சாலை வருடம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் அமைகிறது. அதிக எடைகொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான கனரக வாகனங்கள் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 280 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த சாலையில், இன்னும் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த சாலையை எதிரிகளால் கண்டறிய முடியாது என்பதால் இந்திய படைகள் பாதுகாப்பு குறித்த எவ்வித அச்சமுமின்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago