Skip to main content

7.5% உள்இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கருத்து!

Oct 24, 2020 235 views Posted By : YarlSri TV
Image

7.5% உள்இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கருத்து! 

தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புகளுக்கான 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதா தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் இதன் மீது உடனடியாக முடிவெடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதனிடையே அதிமுக அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து பேசினர். அத்துடன் திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் 7.5% உள்ஒதுக்கீடு விவாகாரத்தில் உடனடி முடிவெடுக்கக்கோரி கடிதம் எழுதினார் . ஆனால் இந்த மசோதா தொடர்பாக முடிவெடுக்க இன்னும் 4 வாரங்கள் தேவை என் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் சாதகமான ஒரு அறிவிப்பு வெளியாகும். அதுவரை கலந்தாய்வு நடக்காது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம். ஆனால் மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை