கொரோனா பரவல் தீவிரமாக உள்ள கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்துள்ளது!
Oct 17, 2020 295 views Posted By : YarlSri TV
கொரோனா பரவல் தீவிரமாக உள்ள கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்துள்ளது!
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மாநிலங்களாக கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகியவை உள்ளன.
உதாரணத்துக்கு, கேரளாவில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 17 ஆயிரத்து 929 ஆக உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.3 சதவீதம் ஆகும். இங்கு 10 லட்சம் பேருக்கு 8,906 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இங்கு 2.22 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். அந்த வகையில் மீட்பு விகிதம் 69.90 சதவீதமாக உள்ளது. தற்போது 94 ஆயிரத்து 609 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இது நாட்டின் மொத்த அளவில் 11.8 சதவீதம் ஆகும். இங்கு 10 லட்சம் பேருக்கு 53 ஆயிரத்து 518 ஆக உள்ளது.
இதேபோல், கர்நாடகத்தில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 848 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது நாட்டின் பாதிப்பில் 10.1 சதவீதம் ஆகும். 10 லட்சம் பேருக்கு 11 ஆயிரத்து 10 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. 6 லட்சத்து 20 ஆயிரத்து 8 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 83.35 சதவீதம் ஆகும். தற்போது 1 லட்சத்து 13 ஆயிரத்து 557 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இது தேசிய அளவில் 14.1 சதவீதம்.
இங்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில நிர்வாகங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இதுபற்றி சுகாதார அமைச்சகம் குறிப்பிடுகையில், “கொரோனாவை கட்டுப்படுத்துவதை வலுப்படுத்துதல், கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறமையான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மாநிலங்களுக்கு மத்திய குழு உதவும். உரிய நேரத்தில் தொற்று பாதிப்பை கண்டறிவதிலும், தொடர்சிகிச்சை அளிப்பதிலும் எழுந்துள்ள சவால்களை திறமையாக எதிர்கொள்வதற்கு மத்திய குழு வழிகாட்டும்” என கூறியது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பப்பட்ட குழுக்களில் ஒரு இணைச்செயலாளர், ஒரு பொது சுகாதார நிபுணர், ஒரு மருத்துவ நிபுணர் இடம் பெற்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
18 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
18 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
18 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
18 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
18 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
18 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago