செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்!
Oct 16, 2020 222 views Posted By : YarlSri TV
செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்!
தஞ்சை மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 5.48 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, தஞ்சை மாவட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் மாணவ,
மாணவியர் பயிற்சி மேற்கொண்டு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற ஏதுவாக மத்திய அரசால் இந்த மைதானத்தை, இந்திய விளையாட்டு குழுமம் மூலம் ஆய்வுசெய்து, பின்னர் சர்வதேச அளவில் ஓடுதள பாதை மற்றும் மின்கோபுரம் அமைக்க 6.26 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணியை துவங்கிவைத்து ஆட்சியர் ஆய்வுசெய்தார். ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட தடகள விளையாட்டு கழக தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உடனிருந்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago