மாணவர்களின் நலனை பாதிக்கும் உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையில்லை!
Oct 16, 2020 264 views Posted By : YarlSri TV
மாணவர்களின் நலனை பாதிக்கும் உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையில்லை!
மாணவர்களின் நலனை பாதிக்கும் உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையில்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும்
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி கொண்டுவந்தால், தமிழக மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு பாதிக்கும் என்றும் கூறிய அவர், நுழைவுத்தேர்வு முறை, கட்டண அதிகரிப்பு போன்றவற்றை தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் நலன் பாதிக்கும் உயர் சிறப்பு தகுதியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய அமைச்சர் கே.பி.அன்பழகன், ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரம் கொண்டதாக இயங்கி வருவதாகவும், 2035ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர் கல்வியில் எட்ட நினைக்கும் தரத்தை, தமிழகம் தற்போதே எட்டி விட்டதாகவும் அவர் கூறினார். அண்ணா பலகலைக்கழக தரத்தை மேலும் அதிகரிக்க தேவை ஏற்பட்டால் தமிழக அரசு அதற்கு நிதி வழங்கும் என்று கூறிய அமைச்சர்,
துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது, தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago