Skip to main content

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் மாரடைப்பால் காலமானார்!

Oct 13, 2020 252 views Posted By : YarlSri TV
Image

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் மாரடைப்பால் காலமானார்! 

முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நல குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.



இந்நிலையில் தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு 1 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.



சிலுவம்பாளையத்தில் இன்று காலை 9 மணியளவில் தவுசாயம்மாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. தனது தாயாரின் இறப்பையடுத்து, இன்று தூத்துக்குடி, நாளை கன்னியாகுமரி, விருதுநகரில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுகளை முதல்வர் பழனிசாமி ரத்து செய்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை