Skip to main content

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 3,175 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

Oct 13, 2020 247 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 3,175 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.75 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10.80 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.80 கோடியைக் கடந்துள்ளது.



கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 9-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 3,175 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.17 லட்சத்தைக் கடந்துள்ளது.



கொரோனா வைரசின் தாக்கத்தால் ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்துள்ளதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது.



5.94 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை