கொரோனா குறித்த காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி!
Oct 15, 2020 257 views Posted By : YarlSri TV
கொரோனா குறித்த காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி!
சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன பேரணி நடைபெற்றது.
சென்னை மேற்கு மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் தங்கள் வாகனங்களில் கலந்துகொண்டனர். பேரணியானது அண்ணா நகரில் துவங்கி பூவிருந்தவல்லி, கரையான்சாவடி, சென்னேரிக்குப்பம், பருத்திபட்டு, ஆவடி சி.டி.எச்.சாலை, திருமுல்லைவாயல் வழியாக சென்று அம்பத்தூரில் நிறைவடைந்தது. அப்போது, போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரானா வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மேற்குமாவட்ட போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1510 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1510 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1510 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1510 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1510 Days ago