இன்று காலை முதல்வர் பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாளின் மூன்றாவது நாள் சடங்கு நடைபெற்றது!
Oct 15, 2020 229 views Posted By : YarlSri TV
இன்று காலை முதல்வர் பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாளின் மூன்றாவது நாள் சடங்கு நடைபெற்றது!
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவரும் முதல்வர் பழனிசாமியின் தாயாருமான தவுசாயம்மாள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. தாயாரை இழந்து வாடும் முதல்வர் பழனிசாமிக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தவுசாயம்மாளின் மூன்றாவது நாள் சடங்கு இன்று காலை நடைபெற்றது.அப்போது முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் முதல்வர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றனர். பின்னர், காவிரி ஆற்றின் கரையோரத்தில் 3ம் நாள் சடங்கு நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் உதயகுமார், செங்கோட்டையன், தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அதிமுக எம்.எல்.ஏக்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago