Skip to main content

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசிய நபரை போலீசார் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்!

Oct 14, 2020 247 views Posted By : YarlSri TV
Image

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசிய நபரை போலீசார் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்! 

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பஸ்கா கிராமத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் (வயது 17, 12 மற்றும் 8) மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் 17 வயது நிரம்பிய மூத்த பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற இருவருக்கும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்கள் கோண்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தப்பி ஓட முயற்சித்த ஆசிசை போலீசார் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.



விசாரணையில், மூன்று சகோதரிகளில் மூத்த பெண்ணை ஆசிஷ் ஒரு தலையாக காதலித்ததும், காதலை அந்தப் பெண் ஏற்காததால் ஆசிட் வீசியதும் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை