மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 05 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 9748 மாணவர்கள்!
Oct 11, 2020 285 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 05 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 9748 மாணவர்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 05 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 9748 மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொரோனோ தொற்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோற்றியுள்ளனா்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய சுகாதார நடைமுறையின் கீழ் பரீட்சை நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பரீட்சை நடைபெறுகின்றது
இதனையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி , கல்குடா , பட்டிருப்பு , மண்முனை மேற்கு ஆகிய 05 வலயங்களில் 103 பரீட்சை நிலையங்களிலும் 13 இணைப்பு பரீட்சை நிலையங்களில் 9748 மாணாவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்
இன்று பரீட்சைக்கு தோற்ற பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார வழிமுறைகளான முகக்கவசம் அணியாது வந்த மாணவர்களின் பெற்றேர்களை பொலிசார் திருப்பிஅனுப்பி முகக்கவசம் எடுத்துவரப்பட்டு மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுமதிகப்பட்டனர்.
இதே வேளை சுகாதார வைத்திய அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு நடைமுறையின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 2, 936 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
காரைநகர் இந்துக் கல்லூரியை 3 நாள்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.!
-
நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சியின் பெண் எம்.பி. மஞ்சுலதா மண்டலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது!
-
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடிவு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago