வவுனியா ஹொரவபொத்தானை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்!
Oct 09, 2020 235 views Posted By : YarlSri TV
வவுனியா ஹொரவபொத்தானை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்!
வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் பிரதான வீதியான ஹொரவபொத்தானை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் மாற்றுப்பாதையூடாக பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை பாரவூர்தியொன்று வீதியின் ஒரத்தில் இருந்த அதிஉயர் மின்கம்பத்துடன் மோதுண்டுள்ளது.
இதன் காரணமாக உயர் மின்அழுத்த விநியோகம் வழங்கப்படும் குறித்த மின்கம்பம் கடும் சேதத்திற்குள்ளானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் உடனடியாக மின்சாரத்தினை துண்டித்ததுடன் போக்குவரத்துப் பொலிஸாரின் உதவியுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தினையும் துண்டித்தனர்.
இதனையடுத்து சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், திருத்த வேலைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலை அடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர்!
-
நீட் தேர்வை நீக்கக்கோரி மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 14ம் தேதியிலிருந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்!
-
ஊடுருவல் மையமாக மாற அனுமதிக்க முடியாது பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago