Skip to main content

வரணி பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற முதியவர் குளவி கொட்டுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Oct 06, 2020 237 views Posted By : YarlSri TV
Image

வரணி பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற முதியவர் குளவி கொட்டுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி! 

வரணி பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற முதியவர் குளவி கொட்டுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 05 உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் மேற்கு பகுதியினை சேர்ந்த பரமாணந்தம் பொன்னம்பலம் வயது 78 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.



தனது ஊரான வரணிக்கு சென்றுள்ளார். அங்குள்ள சிறு ஆலயம் ஒன்றிற்கு பூஜை செய்வதற்கு சென்ற நிலையில் குளவி கொட்டுக்கு உள்ளாகியிருந்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை