மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து ஜீவன் தொண்டமானை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்!
Oct 06, 2020 308 views Posted By : YarlSri TV
மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து ஜீவன் தொண்டமானை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்!
நுவரெலியா மாவட்டத்திலிருந்து மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துள் ரசாக்வுடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில்,
நுவரெலியா மாவட்டத்தின் விவசாய துறையினை அபிவிருத்தி செய்யும் முகமாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் மற்றும் நுவரெலியா மாவட்ட இளைஞர், யுவதிகளின் விளையாட்டு துறையினை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பபட்டது.
இதன் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி மாலைத்தீவிற்க்கான உயர்ஸ்தானியகத்தின் துணை தலைவர் கதீஜாநஜிக்கா , உயர்ஸ்தானிகரின் செயலாளர் ஐஷத் நிஹாட் , அமைசச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago