Skip to main content

கொழும்பு துறைமுகத்தில் மூன்று நாட்களாக நங்கூரமிட்டுள்ள கப்பல்கள்!

Feb 22, 2022 89 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு துறைமுகத்தில் மூன்று நாட்களாக நங்கூரமிட்டுள்ள கப்பல்கள்! 

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் டொலர் பற்றாக்குறையால் மூன்று நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.



இந்த கப்பல்களிலுள்ள எரிபொருளை உடனடி ஒழுங்கு முறையின் கீழ் அரசாங்கம் இறக்குமதி செய்த போதிலும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள் கிடைக்காததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



ஒரு டீசல் கப்பலும் பெற்றோல் கப்பலொன்றும் தொடர்ந்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டால், எரிபொருளுக்கான நிறுத்தக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.



இலங்கையில் தற்போது பத்து நாட்களுக்கு மாத்திரமே பெற்றோலும் 7 நாட்களுக்கும் மட்டுமே டீசலும் கையிருப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினார்.



இந்த நிலையில் எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை