நீளமான ‘அடல் சுரங்கப்பாதை’: சிறப்பம்சங்கள் என்ன?
Oct 03, 2020 226 views Posted By : YarlSri TV
நீளமான ‘அடல் சுரங்கப்பாதை’: சிறப்பம்சங்கள் என்ன?
லே- மணாலியில் இருந்து சுமார் 9.02 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அடல் சுரங்கப்பாதையின் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
இமாச்சல பிரதேச மாநிலம் கிழக்கு பிர் பஞ்சால் மலைத்தொடரில், லே-மணாலி நெடுஞ்சாலையில் 9.02 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை 6 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதனை கட்ட கூடுதலாக கால அவகாசம் தேவைப்பட்டதால், 10 ஆண்டுகளுக்கு பிறகு இதன் கட்டுமானப் பணி அண்மையில் நிறைவடைந்தது. அப்பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் கடும் பனிச்சரிவின் காரணமாக போக்குவரத்து சேவைகள் சுமார் 6 மாத காலங்களுக்கு முடக்கப்படும். இதற்கு ஒரு தீர்வு அளிக்கும் விதமாகவே இந்த அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய நிறுவனமான எஸ்.எம்.இ.சி நிறுவனம் குதிரையின் லாடம் வடிவில் வடிவமைத்த உலகின் மிக நீளமான இந்த சுரங்கப்பாதை, கடல் மட்டத்தில் இருந்து 3,000மீ உயரத்தில் ரூ.4,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மக்கள் இந்த சுரங்கப்பாதையை உபயோகிப்பதன் மூலம், சுமார் 46 கி.மீ பயண தூரத்தையும் 5 மணி நேர பயண நேரத்தையும் குறைக்க முடியும். அதுமட்டுமில்லாமல், சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 60 மீ இடைவெளியில் சிசிடிவி கேமராக்களும், ஒவ்வொரு 500 மீ இடைவெளியில் அவசர கால வெளியேற்றமும் (emergency exit) அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு தீ ஹைட்ராண்டுகள் 10மீ அகலத்தில் அமைக்கப்பட்டிருப்பதோடு, இந்த சுரங்கப்பாதையில் நாள் ஒன்றுக்கு 3000 கார்களும் 1,500 சரக்கு வாகனங்களும் பயணிக்க முடியுமாம். 10.5மீ அகலமும் 5.51மீ உயரமும் கொண்ட இந்த சுரங்கப்பாதை மணாலியில் இருந்து லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கு நிலையில், வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின் போது, ரோஹ்தாங்கில் ரோப்வே கட்ட திட்டமிடப்பட்டது. பின்னர், இந்திரா காந்தி ஆட்சியில் மணாலிக்கும் லேவுக்கும் ஆண்டு முழுவதும் போக்குவரத்து வழங்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சியில் தான் இந்த சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் உறுதியானது. அவரது நினைவாக இந்த சுரங்கப்பாதைக்கு “அடல் சுரங்கப்பாதை” என பிரதமர் மோடி பெயர் சூட்டினார் என்பது நினைவு கூரத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago