Skip to main content

கேரளாவில் இன்று கடற்படையின் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்!

Oct 04, 2020 256 views Posted By : YarlSri TV
Image

கேரளாவில் இன்று கடற்படையின் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்! 

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை அதிகாரிகள் பவர் கிளைடர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சி விமானம் திடீரென தொப்பும்பாடி பாலம் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் துறைமுகத்திற்கு உடனடியாக தகவல் அளித்தனர்.



தகவறிந்துவந்த நிகழ்விடத்திற்கு வந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிளைடர் விமானத்தில் சிக்கியிருந்த 2 கடற்படை அதிகாரிளையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அதிகாரிகள் லெப்டினன்ட் ராஜீவ் ஜா, எலக்ட்ரிகல் பிரிவு அதிகாரி சுனில் குமார் என்பது தெரியவந்துள்ளது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை