Skip to main content

சீரற்ற காலநிலை காரணமாக வீட்டு சுவர் இடிந்து தாய் ஒருவர் பலி!

Jan 11, 2024 34 views Posted By : YarlSri TV
Image

சீரற்ற காலநிலை காரணமாக வீட்டு சுவர் இடிந்து தாய் ஒருவர் பலி! 

ஹிகுரங்கொட மின்னேரிய பிரதேசத்தில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் தாய் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்தமையினால்



இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹிகுரங்கொட பொலிஸார்தெரிவித்துள்ளனர் 



அவரது கணவர் மற்றும் ஒன்றரை வயது குழந்தையும் விபத்தில் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மண்சரிவு அபாயம் 

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் நிலவும் மழையுடன் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது 



 தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடன், அடையாளம் காணப்பட்ட மண்சரிவுகளுக்கு மேலதிகமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர்  ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை